எனக்கொரு
கனவு உண்டு
கல்லெறியப் பட்டுக்
காயப்பட்ட கனவு
உங்களால்
கேலிச் செய்யப்பட்டு
கண்ணீர் சிந்தும் கனவு
இருந்தும்...
அது
என் நம்பிக்கை
என் காயப்பட்டக் கனவுகளுக்கு
மருந்திடுவதே இப்போது எனக்கு
வாழ்க்கையாகிப் போனது
ஏனெனில்
எனக்குத் தெரியும்
என் கனவு
செத்துப் போன
மறுகணமே
நான் செத்துப் போவேன் என்று..