Thursday, June 21, 2007
கவி 33:ஒரு மழை காதல் கவிதை
கார்மேகம்
காலமெல்லாம்
சேர்த்து வைத்தக்
காதலை
இந்த மழை நாளில்
பூமிப் பெண்ணுக்கு
செலவழிக்குதோ...
காதலைச் சொல்ல
மின்னலை பூச்செண்டுக்குதோ
இடிச் சத்தத்தை
இதயத்தின் ஒலியாக்குதோ
மண்மகளை முத்தமிட
மழையெனப் பொழியுதோ
வெட்கத்தின் விழைவென
மழைத் தொட்ட
மண்மகளும் விலகி ஓடியதோ
மழையின் ஒவ்வொரு துளியிலும்
மனம் காதலைக் கொண்டாடியது
மழையின் கடைசி துளி
மவுனமாய் மனம் கிளறியது..
உயிரை உருக்கி
உணர்வைச் செதுக்கி
பத்திரமாய் உனக்க்கென உள்ளுக்குள்
பூட்டி வைத்திருந்த காதல்
மழை வாசம் முகர்ந்து
மனமெங்கும் உன் வாசம் பரப்ப
ஞாபகங்கள் நிழலாய்
நெஞ்சினில் படிய
தொண்டைக் குழிக்குள்
தொக்கியக் காதலை
இன்னுமொரு முறை
இரக்கமின்றி கொன்றேன்..
இறந்தப் போனக் காதலுக்கு
இரண்டு கண்களிலும் அழுதேன்
மழை வரும் போதெல்லாம்
மரணமும் சேர்ந்தே வருகிறது
எனக்கும்
எனக்குள் இருக்கும் காதலுக்கும்
Subscribe to:
Posts (Atom)